கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் பலி
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/05/Screenshot-2024-05-26-180555-654x430.jpg)
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கனடாவின் நியூ பிரவுன்ஸ்விக் பகுதியின் செடியெக் பகுதியில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
100 அடி உயரமான அணைக்கட்டு ஒன்றிலிருந்து வாகமொன்று கீழே வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 54 வயான நபர் ஒருவரும், அப்பர் ரெக்ஸ்டனைச் சேர்ந்த 51 யதான நபர் ஒருவரும் 25 வயதான பெண் ஒருவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் பிரதே பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.