;
Athirady Tamil News

25 மாவட்டங்களிலும் அதிபர் காரியாலயங்கள்

0

தாம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதும் 25 மாவட்டங்களிலும் அதிபர் காரியாலயங்கள் உருவாக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் (Polonnaruwa) நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதான அதிபர் செயலகத்தின் உப காரியாலயங்கள் மாவட்ட ரீதியில் நிறுவப்பட்டு மக்களுக்கு சேவை வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

கட்சிக் கூட்டம்
மக்கள் மாவட்ட ரீதியான காரியாலயங்களுக்குச் சென்று தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொள்ளக் கூடிய ஓர் பொறிமுறைமை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் எந்தவொரு தலைவரும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்கு சேவையாற்றியதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே மக்களுக்கு சேவையாற்றத் தொடங்கி விட்டதாக சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.