;
Athirady Tamil News

தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருத்து கலை கலாசார பண்பாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் விசேட குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை

0

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோயிலில் நாளையதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக கொழும்பிலிருத்து கலை கலாசார பண்பாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் விசேட குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளது.

கொழும்பிலிருந்து கடுகதி புகையிரதத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வந்தடைந்த குறித்த பிரதிநிதிகளை யாழ் புகையிரத நிலையத்தில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுபினர்கள் மற்றும் மாவட்ட செயலர் உள்ளிட்ட பிரதிநிதிகள் வரவேற்றனர்.

தேசிய தைப்பொங்கல் நிகழ்வுகள் இம்முறை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்று கலை நிகழ்வுகள் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த தேசிய தைப்பொங்கல் நிகழ்வு புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.