யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய பொங்கல் விழா

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய பொங்கல் விழா இன்றைய தினம் சனிக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் பௌத்த சாசன மற்றும் மத விவகார அமைச்சர் சுனில் செனவி, கடல் தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர் சரோஜா போல் ராஜ் பிரதி அமைச்சர் கமகதர திசாநாயக்க, பெருந்தோட்ட மற்றும் சமூக கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன், ஶ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.