;
Athirady Tamil News

IOC விநியோகஸ்தர்கள் எடுத்த அதிரடி முடிவு

0

இலங்கை இந்திய கூட்டு எண்ணெய் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களும் எரிபொருள் ஆர்டர் செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி IOC விநியோகஸ்தர்களும் எரிபொருள் ஆர்டர் செய்வதை நிறுத்துகின்றதாக கூறப்படுகின்றது.

இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் சங்கம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முடிவு தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பாதிப்பால் ஒரு எரிபொருள் டேங்கர் லாரியில் தங்களுக்கு முப்பத்தைந்தாயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுவதாக சங்கத்தின் தலைவர் கோசல பண்டார சுட்டிக்காட்டுகிறார்.

இந்த நிலை தொடர்ந்தால் சில மாதங்களுக்குள் இந்த வணிகங்கள் முழுவதுமாக முடங்கும் நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி, தங்கள் சங்கமும் எரிபொருள் ஆர்டர் செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக சங்கத்தின் தலைவர் கோசல பண்டார தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.