;
Athirady Tamil News

ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்!

0

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமையை ரத்து செய்ய ஜனாதிபதி அனுரகுமார அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் போராட்ட கூட்டணி தெரிவித்துள்ளது.

பட்டலந்த ஆணைய அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதில் உள்ள பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் மட்டுமே இதைச் செய்ய முடியும் என அதன் தேசிய அமைப்பாளர் துமிந்த நாகமுவ சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கடமை
ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டு ஊடகங்களுடன் நடத்திய கலந்துரையாடலில், பட்டலந்த ஆணைய அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

எனவே, அந்த அறிக்கையை தாக்கல் செய்வது தற்போதைய அரசாங்கத்தின் கடமை என்றும் அவர் கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பெரும்பாலான பிரதிநிதித்துவம் உள்ள இந்த அரசாங்கம் அந்த பணியை செய்கிறதா என்பதை மிகவும் ஆர்வமாக கவனித்து வருகிறோம் என்றும் அவர் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் துமிந்த நாகமுவ கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.