;
Athirady Tamil News

கடலுக்குள் பொலிஸ்டிக் ஏவுகணைகளை வீசிய வட கொரியா

0

வட கொரியா கடலுக்குள் பல பொலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்களின் வருடாந்த கூட்டு இராணுவப்பயிற்சியானது 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு நாடுகளின் படைகளும் தங்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் திறன்களை வெளிப்படுத்தும்.

இந்தவகையில் அவர்களின் இராணுவப்பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு வடகொரியா தனது ஏவுகணைகளை ஏவி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இது தாக்குதலுக்கு முன்னரான இராணுவப் பயிற்சி என கூறி, வட கொரியா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்த ஏவுகணைகள் ஹ்வாகி மாகாணத்திலிருந்து ஏவப்பட்டன.

இந்த வருடத்தில் ஐந்தாவது முறையாக வடகொரியா இதுபோன்ற ஏவுகணைகளை கடற்பகுதியில் ஏவியுள்ளது என்று தென் கொரியாவின் கூட்டு இராணுவத் தலைவர் தெரிவித்தார்.

தென் கொரியா – அமெரிக்கா இராணுவ கூட்டுப்பயிற்சியை எதிர்த்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சரகத்துக்கு வெளியே போராட்டம் நடந்து வருகிறது.

இந்த பயிற்சி நாட்டில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதால் அதை நிறுத்த போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.