;
Athirady Tamil News

துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிரஞ்சு பெண்ணுக்கு கடிதம் எழுதிய பிரித்தானிய ராணி

0

துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிரஞ்சு பெண்ணுக்கு பிரித்தானிய ராணி கமில்லா கடிதம் எழுதியுள்ளார்.

பிரித்தானிய ராணி கமில்லா (Queen Camilla), துஷ்பிரயோகத்திற்கு ஆளான பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 72 வயது ஜிசேல் பெலிகாட் (Gisele Pelicot) என்பவருக்கு தனிப்பட்ட கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக, அவரது கணவர் டொமினிக் பெலிகாட் (Dominique Pelicot), அவரை மயக்கமருந்து கொடுத்து, இணையதளங்களில் பிறரை அழைத்து பாலியல் வன்முறை மேற்கொள்ள செய்துள்ளார்.

ராணியின் ஆதரவு
77 வயதான ராணி கமில்லா, பல காலமாக பாலியல் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

இது தொடர்பாக, மாளிகை (Buckingham Palace) செய்தி வெளியிட மறுத்தாலும், நியூஸ்வீக் பத்திரிகைக்கு அளிக்கப்பட்ட தகவலில் ராணி தனிப்பட்டமுறையில் இந்த கடிதத்தை எழுதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜிசேல் பெலிகாட் தன்னுடைய துன்பங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது மிகுந்த வீரதீரத்துடன் செய்யப்பட்ட ஒரு முடிவாகும். ஏனெனில், ஏன் அவர் ஒரு ‘பாதிக்கப்பட்டவர்’ எனக் கருதப்பட வேண்டும்? ஏன் அவர் வெட்கப்பட வேண்டும்?” என்று ராணி கமில்லா கடிதத்தில் கூறியுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு
ஜிசேல் பெலிகாட்டின் கணவர் டொமினிக், 50 பேருடன் சேர்ந்து பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

இவர்களுக்கு பிரான்ஸ் அவினியோன் (Avignon) நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதில் பலருக்கு 3 முதல் 15 ஆண்டு வரை தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சிலர் தங்கள் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளனர்.

ஜிசேல் பெலிகாட் – போராட்டம் மற்றும் பாராட்டு
ஜிசேல் பெலிகாட் தனது அடையாளத்தை வெளிப்படுத்த மறுக்காமல், தன்னுடைய வழக்கை பொது மக்களுக்குத் தெரியப்படுத்தினார்.

அவரின் துணிச்சலுக்கு பாராட்டாக, அவருக்கு நோபல் சமாதான பரிசு வழங்க வேண்டும் என 173,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஜிசேல் பெலிகாட், “இன்னும் எத்தனையோ அடையாளம் தெரியாத பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் குரலாக நான் இருக்கிறேன்” என கூறி, தன்னுடைய போராட்டத்தை தொடருவதாக உறுதியளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.