;
Athirady Tamil News

நாட்டில் 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

0

நாட்டில் தாதியர் சேவையில் சேர்க்கப்பட்ட 3,147 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா, இன்று(24) காலை 9.30 மணிக்கு அலரி மாளிகையின் கூட்ட மண்டபத்தில் பிரதமரின் தலைமையில் நடைபெற்றது.

நாட்டின் தாதியர் சேவை வரலாற்றில் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலானவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை.

இந்த விழாவிற்கு இணையாக, தாதியர் சேவையில் 79 விசேட தர அதிகாரிகளுக்கான பதவி உயர்வுகளும் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க உட்பட சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.