;
Athirady Tamil News

ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு ; இந்தியா எதிர்காலத்தில் பாகிஸ்தானிடம் எண்ணெய் வாங்கலாம்!

0

பாகிஸ்தானுடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதால், வரும் காலங்களில் பாகிஸ்தானிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் நிலைகூட வரலாம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் உடன் இணைந்து எண்ணெய் ஒப்பந்தங்களில் ஈடுபட இருப்பதாகவும், மிகப் பெரிய சேமிப்பு கிடங்கை அந்நாட்டில் அமைக்கப்போவதாகவும் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் சமூக வலைதள பதிவில்,

இன்று வெள்ளை மாளிகையில் வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பணிகளில் நாங்கள் மிகவும் மும்முரமாக இருக்கிறோம்.

அமெரிக்காவை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்ய விரும்பும் பல நாடுகளின் தலைவர்களிடம் நான் பேசியுள்ளேன்.

பாகிஸ்தான் நாட்டுடன் நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை முடித்துள்ளோம், இதன் மூலம் பாகிஸ்தானும் அமெரிக்காவும் தங்கள் மிகப்பெரிய எண்ணெய் இருப்புக்களை மேம்படுத்துவதில் இணைந்து செயல்படும்.

இந்த கூட்டாண்மையை வழிநடத்தும் எண்ணெய் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

யாருக்குத் தெரியும், ஒருவேளை அவர்கள் ஒரு நாள் இந்தியாவிற்கு எண்ணெய் விற்பனை செய்வார்கள்! அதேபோல், மற்ற நாடுகளும் கட்டணக் குறைப்புக்கான சலுகைகளை வழங்குகின்றன.

இவை அனைத்தும் நமது வர்த்தக பற்றாக்குறையை மிகப் பெரிய அளவில் குறைக்க உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.