;
Athirady Tamil News

யாழில் கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம்

0

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்கள் 40 மற்றும் 50 வயதுடையவர்கள் ஆவர். நேற்று (05) படகில் கடற்றொழிலுக்காக சென்ற இருவரும் இதுவரை வீடு திரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் மேற்கண்ட பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.