மூதூர் கோர விபத்தில் இளைஞன் உயிரிழப்பு ; மேலதிக தகவல்
திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் கார் மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (08) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் காரில் பயணித்த தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஹினாயத்துல்லாஹ் ஜெம்சித் என்பவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர் தோப்பூரைச் சேர்ந்த முஸ்தகீம் சியான் என தெரியவருகிறது. காரில் பயணித்தவர்கள் தோப்பூரிலிந்து மன்னாருக்கு வேலை நிமிர்த்தமாக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.