;
Athirady Tamil News

பிரான்சில் மீண்டும் கிளம்பிய மேக்ரான் எதிர்ப்பு! கூடப்போகும் ஒரு மில்லியன் பேர்.. அச்சத்தில் பொலிஸார்

0

பிரான்சில் மேக்ரான் நிர்வாகத்திற்கு எதிராக வன்முறைக்கு தயாராகி வரும் நிலையில், 40க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒரு மில்லியன் கலகக்காரர்கள்
கடந்த வாரம் Block Everything பிரச்சாரத்தைத் தொடர்ந்து வீதி போராட்டங்கள் ‘கருப்பு வியாழன்’ என்று அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தற்போது மேக்ரான் எதிர்ப்பு மீண்டும் பிரான்சில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ் வீதிகளில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் கலகக்காரர்கள் இறங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

உள்துறை அமைச்சக மதிப்பீட்டின்படி, நாடு முழுவதும் 600,000 முதல் 900,000 பேர் வரை வீதிகளில் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரிஸில் 25 பேர் கைது
பாரிஸின் மெட்ரோ மற்றும் பாரிஸ் ரிங் ரோடு உள்ளிட்ட முக்கிய போக்குவரத்து இணைப்புகளை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால், புதன்கிழமை காலை 10 மணியளவில் அங்கு 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் மார்சேய், துலூஸ் போன்ற பிற முக்கிய நகரங்களிலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சுமார் 1000 பேர் பாரிஸில் மட்டும் கலவரத்தை ஏற்படுத்த இலக்கு வைத்துள்ளதாக பொலிஸார் அஞ்சுவதாகவும், நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், வாக்குப்பதிவு ஒரு மில்லியனை எட்டும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.