;
Athirady Tamil News

தென்னிலங்கை வைத்தியசாலைக்குள் நடந்த பரபரப்பு – வைத்தியர்களை சிறைப்பிடித்த உறவினர்கள்

0

களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புற்றுநோய் நோயாளி ஒருவர் உயிரிழந்ததால் கோபமடைந்த குடும்ப உறுப்பினர்கள் உட்பட 5 பேர், மருத்துவரையும் சுகாதார ஊழியர்களையும் அடைத்து வைத்துள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரம் அடைத்து வைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் உள்ள நாகொட போதனா மருத்துவமனையின் 16வது அறையின் மருத்துவர் மற்றும் நான்கு ஊழியர்கள் இந்த துன்புறுத்தலுக்குள்ளாகியுள்ளனர் என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய்க்கு சிகிச்சை
களுத்துறை வடக்கில் வசிக்கும் ஒருவர் கடந்த 18 ஆம் திகதி இரவு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 5 பேர் அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர், ஒரு ஆண் மற்றும் பெண் செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களை அச்சுறுத்தியதாகவும், அவர்களை அங்கிருந்து வெளியேறவோ அல்லது தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளவோ ​​அனுமதிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம்
இதனால் ஏனைய நோயாளிகள் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாகவும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவரரை கொழும்புக்கு மாற்றுவதற்காக அம்புலன்ஸ் கோருவது தொடர்பாக முதல் நாள் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது மோதலாக மாறியதாகவும் மருத்துவமனை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மருத்துவர் களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.