;
Athirady Tamil News

48 மணி நேரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்; பிரான்ஸ் ஜனாதிபதி அறிவிப்பு

0

48 மணி நேரத்தில் புதிய பிரதமரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் அலுவலகம் அறிவித்துள்ளது.

பிரான்ஸ் பிரதமர் செபஸ்டியன் செபஸ்டியன் லெகுர்னு, அரசியல் நெருக்கடி காரணமாக பதவியேற்ற சில வாரங்களில் பதவி விலகினார்.

அவரது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி இமானுவேல் மேக்ரானும் ஏற்றுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து 48 மணி நேரத்திற்குள் புதிய பிரதமரை நியமிப்பதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்தது.

பிரான்ஸ் நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் 6வது பிரதமரைத் தேடும் பணியில் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மீண்டும் ஈடுபட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.