;
Athirady Tamil News

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

0

வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு மறுபரிசீலனைக்காக டிசம்பர் 17 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (10) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோன் மற்றும் பிற சந்தேகநபர்கள் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.