;
Athirady Tamil News

நீதி வெல்லும் – கரூர் சம்பவம் குறித்து விஜய் பதிவு

0

கரூர் வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், விஜய் நீதி வெல்லும் என தெரிவித்துள்ளார்.

கரூர் நெரிசல் சம்பவம்
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த குழுவில் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்டிராத 2 ஐபிஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.

வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், “நீதி வெல்லும்!” என தவெக தலைவர் விஜய் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.