;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் இலங்கை இளைஞனுக்கு கிடைத்த பேரதிஷ்டம் ; மகிழ்ச்சியின் உச்சத்தில் குடும்பம்

0

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் அந்நாட்டில் நடந்த லொத்தர் குலுக்கலில் ஒரு லட்சம் திர்ஹம்களை வென்றுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த ஊழியர் ஒருவர், முதலில் 100 திர்ஹாம் வெற்றி பெற்றிருந்தார். தற்போது பெரிய தொகையான 100,000 திர்ஹாம் வெற்றி பெற்றுள்ளார்.

லொத்தசீட்டுக் குலுக்கலில் வெற்றி
29 வயதான யாசித பிரசன்ன என்ற இளைஞரே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட லொத்தசீட்டுக் குலுக்கலில் வெற்றியாளராக பரிசை பெற்றுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து, பின்னர் UAE லொத்தரில் பதிவு செய்தேன். நான் நேரடி குலுக்கலைப் பார்க்கவில்லை.

எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது, அதில் நான் 100,000 திர்ஹம்களை வென்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நான் மிகவும் உற்சாகம் அடைந்தேன். அம்மா மற்றும் அப்பாவோடு இலங்கை செல்லத் திட்டமிட்டுள்ளேன்.

நான் ஒரு தொழிலில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளேன். அடுத்தகட்டமாக 100 மில்லியன் திர்ஹாம் பரிசை நோக்கி தனது கனவுகளைத் துணிச்சலுடன் வளர்க்கும் நடவடிக்கையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

100,000 திர்ஹம் என்பது இலங்கையின் தற்போதைய நாணய பெறுமதியின்படி சுமார் 83 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.