;
Athirady Tamil News

தமிழ் மக்களின் அவலங்களை சித்தரிக்கும் ‘என்று தணியும்’ நூல் வெளியிடப்பட்டது!

0

யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவி புவஸ்ரினா மெய்யழகன் எழுதிய ‘என்று தணியும்?’ நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பளை பிரதேச செயலாளரும், கவிஞருமான ஜெயசீலன் நூலை வெளியீட்டு வைக்க, முதல் பிரதியை ராஜா கிறீம் ஹவுஸ் ஏ – 1 நிறுவனங்களின் உரிமையாளர் சின்னராஜா சண்முகநாதன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வின் இறுதியில், நூல் வெளியீட்டு உரையினை எழுத்தாளரும், தமிழ் ஆசிரியருமான கனகபாரதி செந்தூரன் நிகழ்த்தினார்.

இந்நூல் தமிழ் மக்களின் வலி சுமந்த செம்மணி மனிதப் புதைகுழியின் அவலங்களை சித்தரிக்கும் சம்பாசனையுடன் கூடிய நாவல் வடிவமாக எழுதப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.