;
Athirady Tamil News

தெற்கு லெபனான் மக்களை உடனடியாக வெளியேற இஸ்ரேல் உத்தரவு

0

தெற்கு லெபனானில் உள்ள சுமார் ஆறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு கட்டாயமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் அவிச்சாய் அத்ராயி உத்தரவிட்டுள்ளார்.

‘X’ தளத்தில் அரபு மொழியில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அத்ராயி, பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறும், அந்த கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து திறந்தவெளிகளை நோக்கி குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திற்கு அப்பால் விலகியிருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று பிறப்பிக்கப்பட்ட இது போன்ற இரண்டாவது கட்டாய வெளியேற்ற உத்தரவு இதுவாகும்.

இதற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்னர், அந்நாட்டின் தெற்கே உள்ள 10 கிராமங்களில் வசிக்கும் மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அவர் உத்தரவிட்டிருந்தார்.

இஸ்ரேலின் இந்த முதலாவது வெளியேற்ற உத்தரவுக்கு முன்னரும் பின்னரும் லெபனானின் சில பகுதிகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.