;
Athirady Tamil News

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும்

0

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதனை ஏற்றுக்கொண்டு , சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிடம் தாம் கோரிக்கையை முன் வைத்துள்ளதாக ,  வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூது குழுவினர் இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர்.
அதன் போது , தூதுக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளாக வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி. உள்ளிட்ட இருவரை அழைத்து ஐரோப்பிய ஒன்றியத்தினர் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
குறித்த சந்திப்பின் பின்னர் , வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.