;
Athirady Tamil News

வடக்குக்கான புகையிரத மார்க்கத்தில் தடங்கல்!

0

பொத்துஹெர தொடருந்து நிலையத்திற்கு அருகில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக வடக்கு தொடருந்து மார்க்கத்தில், போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொல்கஹவெலவிலிருந்து மஹவ நோக்கிப் பயணித்த புகையிரதம் ஒன்றே பொத்துஹெர தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தொடருந்து ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தடங்கல் நிமித்தம், பொதுஹெர ரயில் நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து ரயில்களும் தாமதமாகவே பயணிக்கும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.