;
Athirady Tamil News
Daily Archives

22 November 2021

பொலிஸ் நிலையம் ஒன்றில் 28 அதிகாரிகளுக்கு கொரோனா!!

இரத்தினபுரி, ரக்குவானை பொலிஸ் நிலையத்தின் 28 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக கொடகவெல ரக்குவானை பொது சுகாதார பரிசோதகர் எஸ் எஸ்.முனவீர தெரிவித்துள்ளார். ரக்குவானை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ்…

ரஷ்யாவை உலுக்கும் கொரோனா – 93 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு…!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில்…

சுற்றுலா விடுதி சுற்றிவளைப்பு – 12 பேர் கைது!!

இணையத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றை சுற்றிவளைத்த போது 12 சந்தேக நபர்கள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிதிகம பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நேற்று (21) இரவு இந்த…

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல அனுமதி !!

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட விசா வைத்திருப்பவர்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலியா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக தற்போது…

சூடானில் அமைதி திரும்ப வாய்ப்பு- நீக்கப்பட்ட பிரதமரை மீண்டும் பதவியில் அமர்த்த ராணுவம்…

சூடான் நாட்டில் பொதுமக்கள்-ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சியை ராணுவம் கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றியது. அரசியல் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் செயல்பட்டு…

பணமழை பொழிந்த டிரக்: அள்ளிச்சென்ற மக்கள்- டிரைவருக்கு வந்த சிக்கல்….!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் காலை 9.15 மணிக்கு பணம் நிரம்பிய கண்டெய்னருடன் டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த டிரக் கெனான் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது கண்டெய்னர் திறந்து ரூபாய் நோட்டுகள் சாலையில் பறக்க தொடங்கின.…

உதயன் பத்திரிக்கை ஆசிரியர் கானமயில்நாதன் காலமானார் !!

மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிக்கை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்றைய தினம் திங்கட்கிழமை காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 79ஆகும். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ம.வ. கானமயில்நாதன் 1942ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம்…

மஹிந்த கிண்ணத்தை கடாசினார் முஜிபூர் ரஹ்மான் !!

சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை மீறியே மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்து தொடரின் இறுதி போட்டிகள் நடைபெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார். சபாநாயகர் தலைமையிலான இன்றைய (22) பாராளுமன்ற…

மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீர் மரணம்!!

கிளிநொச்சி ஏ9 வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக நேற்று சுமார் இரவு 8.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இல 403 திருநகர் தெற்கைச் சேர்ந்த சின்னத்துரை…

பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வாசிப்பு!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து போதுமான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள…

காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு!!

திருகோணமலை தனியார் காணி ஒன்றில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியாருக்குச் சொந்தமான காணியை துப்புரவு செய்து கொண்டிருக்கும் போது இந்த கைக்குண்டை கண்டதாகவும் அதனை அடுத்து பொலிஸ் நிலையத்திற்கு…

ஜெருசலேமில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்…!!

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் இன்று காலை மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக…

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெல்லியில் இன்று தர்ணா போராட்டம்…!!

பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வரும் திரிபுராவில் 2023 ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் திரிணாமுல் காங்கிரஸ் தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது. வரும் 25ம் தேதி நடைபெறும் உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுகிறது. இதற்காக கட்சியின் முக்கிய…

4 கிலோ வரை உணவு உண்ணும் சாப்பாட்டு ராமனுக்கு ஓட்டல் செல்ல தடை..!!!

சீனாவில் உள்ள ஷாங்ஷா என்ற இடத்தை சேர்ந்தவர் ஹாங். இவர் மிக அதிகமாக சாப்பிடும் சாப்பாட்டு ராமனாக வலம் வருகிறார். இவர் அதிகமாக உணவு சாப்பிடுவதை வீடியோக்கள் எடுத்து வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த நகரில் ஹன்டாடி பார்பிக்யூ ஓட்டலுக்கு…

காற்று மாசு அச்சுறுத்தல் – டெல்லி நகரில் லாரிகள் நுழைய தடை நீட்டிப்பு…..!!

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அபாய நிலையிலேயே உள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, நவம்பர் 21-ம் தேதி வரை கட்டுமானம், இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், அரசுத்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,488 பேருக்கு கொரோனா…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,488 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,329 பேர் குணமடைந்துள்ள நிலையில் 313 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள்…!!

1.5 மில்லியன் டோஸ் பைசர் தடுப்பூசி ​தொகை ஒன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த தடுப்பூசி தொகை இன்று (22) அதிகாலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். எமிரேட்ஸ் சரக்கு விமானம் மூலம் இந்த…

பட்ஜெட்டுக்கு ஆதரவாக நான் வாக்களிப்பேன் !!

2022ஆம் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாகத் தெரிவித்த ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ, பட்ஜெட் எவ்வளவு பலவீனமாக காணப்பட்டாலும் அரச சேவைகள் செயற்படுத்தப்படவேண்டும் என்றார். பட்ஜெட்டை தோற்கடிக்க வேண்டுமாயின்…

பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களிக்க ரிஷாட் முடிவு !!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டமானது நேற்றை தினம் (21) நடைபெற்றது. இதன் போது அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுத்தீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி றஹீம் மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகிய…

சாணக்கியன் உள்ளிட்ட எழுவருக்கு தடை !!

கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட ஏழு பேருக்கு தடை உத்தரவு…

விரக்தியடைந்த இளைஞர்களே நீண்ட வரிசையில் நிற்கின்றனர்!!

நாட்டில் வாழ்வதற்கு இளைஞர்கள் விரும்பவில்லை எனவும் விரக்தியடைந்துள்ளனர் எனவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதனால்தான் கடவுச்சீட்டுகளுக்கான நீண்ட வரிசைகளை காணக் கூடியதாகவுள்ளது என்றும் தெரிவித்தார்.“சமகி விஹிதும்”…

அரசாங்கத்தின் கொள்கையை அரச ஊழியர்கள் விமர்சிக்கக் கூடாது!!

அரச மற்றும் அரசாங்கத்தின் கொள்கையை விமர்சனம் செய்யவேண்டாமென்ற கட்டளை, அரச ஊழியர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதென செய்திகள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் கொள்கை மற்றும் செயற்பாடுகள் சமூக ஊடகங்களின் ஊடாக விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு…

ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றுவோர் வாகனத் தொடரணியை பயன்படுத்துவதில்லை !!

ஜனாதிபதி உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலகத்தில் சேவை புரிகின்ற எந்தவோர் அதிகாரியும் வாகனத் தொடரணியைப் பயன்படுத்துவதில்லை என்பதை பொறுப்புடன் கூற வேண்டுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதேபோன்று, அதிகாரிகள் தமது பதவிக்குரிய…

அபிவிருத்திகள் தேர்தலை இலக்காக கொண்டவையல்ல !!

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அரசாங்க மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள், தேர்தலை இலக்காக கொண்டுள்ளதென சிலர் குற்றம் சுமத்தினாலும், ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்களும் பத்து மாதங்களும் உள்ளன என்று வெளிவிவகார அமைச்சர்…

29 முதல் அரச பணிகள் முடங்கும்!!

தங்களது சம்பளத்தை அதிகரிக்காவிட்டால், எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து அரச பணியாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுவர் என, இலங்கை அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது. அந்த சம்மேளனத்தின் தலைவரால் இது தொடர்பில் கடந்த…

கொழும்பு – கண்டி ரயில் சேவை இன்று முதல்… !!

சீரற்ற வானிலை காரணமாக ரயில் பாதைக்கு ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கொழும்பு - கண்டி ரயில் சேவைகள் இன்று மீண்டும் ஆரம்பமாகிறது. மழை காரணமாக மலையக ரயில் பாதையில் சில இடங்கள் தாழிறங்கியிருந்தன. பதுளையிலிருந்து நானுஓயா…

முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த சட்டக் கட்டமைப்பு!!

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த தேவையான சட்டக் கட்டமைப்பை கண்டறிவது உள்ளிட்ட ஏனைய விடயங்களை வகுப்பது தொடர்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாட ஆரம்பித்துள்ளார். அரச துறையில் ஓய்வூதியம்…

பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழை…!!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என…

ராஜஸ்தான் முதல் மந்திரியின் ஆலோசகர்களாக 6 எம்.எல்.ஏ.க்கள் நியமனம்…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முக்கிய தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இதனால் ஏற்பட்ட மோதலை காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு…

அட்லாண்டா விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம்: பீதியடைந்த பயணிகள்…!!!

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் வாரத்தின் இறுதிநாட்கள் என்பதால் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஏராளமான பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட துப்பாக்கியை லக்கேஜ் பேக்கில் மறைத்து வைத்து ஒரு பயணி…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: கோவை அரசு கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்டு…!!

கோவையில் உள்ள ஒரு அரசு கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த கல்லூரியில் பி.பி.ஏ. துறைத்தலைவர், பேராசிரியராக வேலை பார்க்கும் விளாங்குறிச்சி மதிநகரை சேர்ந்த ரகுநாதன்(வயது42) என்பவர் மாணவிகளுக்கு இரவு…

118 ஆண்டுக்கு முன்பு வந்ததையும் தாண்டி புதிய வரலாறு படைத்த பாலாற்று வெள்ளம்..!!

தமிழகத்தின் வடமாவட்டங்களின் விவசாயத்தை வளமாக்கி ஜீவாதாரமாக விளங்கும் பாலாறு, கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகி 93 கி.மீ பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ., தமிழகத்தில் 222 கி.மீ தொலைவுக்கு பயணித்து வயலூர் முகத்துவாரத்தில் வங்காள…

பூஸ்டர் தடுப்பூசி குறித்து இந்த மாத இறுதியில் அறிவிப்பு – மத்திய அரசின் ஆலோசனை குழு…

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் சமீபகாலமாக குறைந்து வருகிறது. இந்த நோய் தொற்றால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு பல நோயாளிகள் உயிரிழந்தனர். கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் அதன் தொற்று பல வகையிலும்…

டெல்லியில் கொடுத்த அதே வாய்ப்பை கொடுக்க வேண்டும்: உத்தரகாண்டில் அரவிந்த் கெஜ்ரிவால்…

ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய அன்னா ஹசாரேயிடம் இருந்து பிரிந்து, ஆம் ஆத்மி கட்சியை தொடங்கியவர் கெஜ்ரிவால். இவரது தலைமையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை பிடித்தது. மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இதனால் 2020…