;
Athirady Tamil News

சாணக்கியன் உள்ளிட்ட எழுவருக்கு தடை !!

0

கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட ஏழு பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் கோ.கருணாகரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், த.சுரேஷ் முன்னாள் போராளிகளான நடராசா சுரேஸ், தம்பித்துரை கஜேந்திரன்,
பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் சீ.புஷ்பலிங்கம் ஆகியோருக்கே இவ்வாறு தடை
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைவாக குறித்த நபர்கள் 20ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.