;
Athirady Tamil News

29 முதல் அரச பணிகள் முடங்கும்!!

0

தங்களது சம்பளத்தை அதிகரிக்காவிட்டால், எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து அரச பணியாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபடுவர் என, இலங்கை அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது.

அந்த சம்மேளனத்தின் தலைவரால் இது தொடர்பில் கடந்த 13ஆம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளதாகவும் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இம்முறை பட்ஜெட்டில், அரச பணியாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அதனால் அரச பணியாளர்கள் கடும் பொருளாதார பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டி, கடிதம் அனுப்ப்ப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.எனவே, அவர்கள் குறித்து கவனம் செலுத்தி, மாதாந்தம் அவர்களது சம்பளத்தை 16,000 ரூபாயாகவும் கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து கவனம் செலுத்தாவிடின், இரண்டு வாரங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்திதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எனவே, அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளமானது, மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தாம் முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில், அரச நிறுவனங்களின் சகல பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் இணைவதுடன்,
அரச நிறுவனங்களின் கனிஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் இணைவர் என
குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, அரச பணியாளர்கள் வாழ்வதற்கான உரிமையை உறுதிபடுத்தி, உரிய சம்பளம் அல்லது அவர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமையை மீறாமல் அவர்களுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.அவ்வாறு இல்லையென்றால், எதிர்வரும் 29ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என, இலங்கை அரச பணியாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பி.ஏபீ. பஸ்நாயக்கவால் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.