;
Athirady Tamil News

வவுனியா பூந்தோட்டம் கிராமத்தில், சுவிஸ் அஜீகன் பிறந்தநாளில் “கற்றல் உபகரணங்கள்” வழங்கல்.. (வீடியோ படங்கள்)

0

வவுனியா பூந்தோட்டம் கிராமத்தில், சுவிஸ் அஜீகன் பிறந்தநாளில் “கற்றல் உபகரணங்கள்” வழங்கல்.. (வீடியோ படங்கள்)
################################

சுவிஸ் நாட்டில் வசிக்கும் அஜீகன் அவர்கள் தனது இருபத்தோரவது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு சமுக நலத் திட்டங்களை மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் மூலமாக தமிழர் தாயகப்பகுதிகளில் ஏற்பாடு செய்து கொண்டாடினார்.

யாழ் சரவணை மேற்கு வேலணையைச் சேர்ந்தவரும், சுவிஸ் சார்கன்ஸ் பகுதியில் வசிப்பவருமான தோழர் மோகன் என அழைக்கப்படும் பற்பநாதன் அருட்சோதி தம்பதிகளின் செல்வப் புதல்வன் அஜீகன் தனது இருபத்தோராவது பிறந்த தினத்தை தனது தாயகப் பகுதிகளில் பல்வேறு சமுகப் பங்களிப்புகள் மூலம் இன்றையதினம் கொண்டாடினார்.

தோழர் மோகன் என அழைக்கப்படும் அருட்செல்வம் தம்பதிகளின் செல்வப் புதல்வன் அஜீகன் அவர்களின் இருபத்தோராவது பிறந்த நாள் இன்றாகும் இதனை முன்னிட்டு வவுனியா பூந்தோட்டம் கிராமத்தில் மாலை நேர கற்றலில் ஈடுபடும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்க மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வுக்கு மாணவர்களோடு அதிகளவில் பெற்றோரும் கலந்து கொண்டார்கள்.

இந்திகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சிற்றுண்டிகள் மற்றும் குளிர்பானங்களும் வழங்கப்பட்டது. செல்வன் அஜீகன் அவர்கள் சுவிஷ் நாட்டில் பிறந்து வளர்ந்த போதும் தன் பெற்றோர்களின் ஊடாக தன் தாய் நாட்டை பற்றி கேள்விப்பட்டு அறிந்து கொண்டவர், இது மாத்திரமின்றி “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” சேவைகளைப் பற்றி சமூக வலைத்தளங்கள் மூலமாக நன்கு அறிந்து கொண்டவர். எனவே தான் தனது பிறந்த நாளை பாதிக்கப்பட்டு வறிய நிலையில் வாழும் மக்களோடும், மாணவர்களோடும் கொண்டாட விரும்பி மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் பிரதம ஆலோசகர் மற்றும் பிரதம அமைப்பாளருமான சுவிஸ் ரஞ்சன் அவர்களை தொடர்பு கொண்டு தனது விருப்பத்தை தெரிவித்தார்.

உடனடியாக குறிப்பிடட சிலமணி நேரத்தில் செல்வன்.அஜீகன் அவர்களது இருபத்தோராவது பிறந்த நாள் நிகழ்வுகள் நடாத்த ஒழுங்குகள் செய்யப்பட்டு கொண்டாடப்பட்டது. அந்த வகையில் காலையில் மணிப்புரம் ஆனந்த இல்லத்து அன்னையர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய அஜீகன் வவுனியா பூந்தோட்டம் கிராமத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கற்றல் பொதிகளை தங்களது நிதிப்பங்களிப்பில் வழங்கி வைத்தார்.

செல்வன் அஜீகன் அவர்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் சார்பாகவும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
புகையிரத நிலைய வீதி,
வவுனியா.

24.03.2021

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.