;
Athirady Tamil News

யாழ் . பல்கலை சட்டத்துறை மாணவர்களின் நீதம் புத்தக வெளியீடு

0

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கம் இணைந்து முன்னெடுத்த நீதம் சட்ட இதழின் வெளியீட்டு விழா இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது

யாழ் பல்கலைக்கழக கைலாசாபதி கலையரங்கில் நடைபெற்ற இதழ் வெளியீட்டு விழாவில், உயர் நீதிமன்ற நீதியரசர் குமுதினி விக்கிரமசிங்கே பிரதம விருந்தினராகவும் யாழ்ப்பாணம் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கோசலை மதன் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.