;
Athirady Tamil News

தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு

0

தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று(11) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

பொற்பதி வீதியில் அமைந்துள்ள அறிவாலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன், யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன், தமிழ் மக்கள் கூட்டணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.