;
Athirady Tamil News

பாரீஸ் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மன்னாரில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)

0

பாரீஸ் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மன்னாரில் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ)
##########################################

யாழ் அச்சுவேலியை பூர்வீகமாக கொண்ட சுவிஸ் நாட்டில் பிறந்து பிரான்ஸ் நாட்டில் வாழும் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் மன்னார் மாவட்ட முருங்கன் பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

முன்னதாக பிரான்ஸ் பாரீசில் வாழும் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்தநாள் நிகழ்வானது அவர்களது குடும்பத்தின் நிதிப் பங்களிப்புடன் வவுனியா பிரதேச செக்கட்டிப்புலவு கிராமத்தில் அமைந்துள்ள மாணிக்கதாசன் இலவச மறுமலர்ச்சி கல்விக் கூடத்தின் பொறுப்பாசிரியையும், முன்பள்ளிகளுக்கான இணைப்பாளருமான திருமதி வேஜினி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாணவர்கள், பெற்றோர்கள், சமுர்த்தி சங்கத்தின் செயலாளர் திருமதி மது சுலக்சனா, பொருளாளர் திருமதி மணிவண்ணன் கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டு பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக் வெட்டி மாணவர்களின் பெரும் சந்தோசத்தின் மத்தியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு அதனை மற்றவர்கள் போல் மகிழ்சியுடன் கொண்டாட வேண்டும் என விரும்பிய திருமதி.உமாசங்கர் ஜெனனி அவர்கள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் கேட்டுக் கொண்டதற்கமைய மன்னார் மாவட்ட முருங்கள் பிரதேச சில கிராமங்களில் வாழும் வயோதிபக் குடும்பங்கள் கணவரால் கைவிடப்பட்ட குடும்பங்கள், மிகவும் வறிய குடும்பங்கள் என மன்னார் மாவட்ட புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட செயலாளர் திரு ஜேம்ஸ் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

தனது முப்பத்திநான்காவது பிறந்த நாளைக் கொண்டாடும் பாரீஸ்வாழ் திருமதி.உமாசங்கர் ஜெனனி அவர்களை நீண்ட ஆயுளோடு தேக ஆரோக்கியம் பெற வேண்டி தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வாழ்த்தி மகிழ்கின்றது.

மேற்படி திருமதி.உமாசங்கர் ஜெனனி அவர்களின் தந்தையாரான சுவிஸில் (தூணில்) வாழும் வர்த்தகர், முருகன் தொண்டரான அச்சுவேலியை சேர்ந்த திரு.சுபாஷ்கரன் (ராஜு) அவர்களும் பல சமூகப் பங்களிப்புகளை மக்களுக்காக செய்து வருபவர் என்பதும், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் இயக்குனர் சபை உறுப்பினர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை பிறந்தநாளினை முன்னிட்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் உலருணவுப் பொதிகள் வழங்க நிதிப்பங்களிப்பு செய்த திரு.திருமதி உமாசங்கர் ஜெனனி குடும்பத்தினருக்கு தாயக உறவுகள், மாணவர்கள், பெற்றோர்கள் சார்பில் மதிப்புமிகு நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

03.11.2021


“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

பாரீஸ் திருமதி உமாசங்கர் ஜெனனி அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டமும் கற்றல் உபகரணங்கள் வழங்கலும்.. (படங்கள் வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.