;
Athirady Tamil News

புங்குடுதீவு அமரர் திருமதி கலையரசி நினைவாக, ஆத்ம சாந்திப் பூசையும், அன்னதான வைபவமும்.. (படங்கள், வீடியோ)

0

புங்குடுதீவு அமரர் திருமதி கலையரசி நினைவாக, ஆத்ம சாந்திப் பூசையும், அன்னதான வைபவமும்.. (படங்கள், வீடியோ)

யாழ். புங்குடுதீவு ஆறாம் வட்டாரம் இறுப்பிட்டியைச் சேர்ந்தவரும், கனடாவில் அமரத்துவம் அடைந்தவருமான அமரர். திருமதி. கலையரசி பாலகோபாலன் அவர்களின் முதலாமாண்டு திதி தாயகத்தில் சிதம்பரபுரம் பழைய கற்குளம் ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் விசேட ஆத்மசாந்தி பூசையும் விசேட அன்னதானமும் வழங்கி அன்னாரின் குடும்பத்தின் சார்பாக கனடாவில் வசிக்கும் அன்னாரின் சகோதரியான திருமதி கவிதா இந்திரன் அவர்களின் நிதிப் பங்களிப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினரால் அனுஸ்டிக்கப்பட்டது.

அமரத்துவமடைந்த திருமதி கலையரசி பாலகோபாலன் அவர்களின் நினைவாக விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட மதிய விசேட பூசை தேவார பாராயணத்துடன் ஆரம்பமாகி சுற்றுப்புற பரிவார மூர்த்திகளுக்கு மோட்ச அர்ச்சனை செய்யப்பட்டு குருக்களுக்கு தானம் வழங்கப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டது

தொடர்ந்து வருகை தந்த அனைத்து அடியார்களுக்கும் அன்னாரின் நினைவாக மதிய உணவு வழங்கப்பட்டது. பெருந்தொகயான மக்கள் அன்னாரின் ஆண்டுத் திதி நினைவுப் பூசையில் கலந்து கொண்டதுடன் மதிய அன்னதானத்திலும் பங்கெடுத்தனர்.

முன்னதாக அன்னாரின் முதலாமாண்டு நினைவாக அவரது சகோதரியான கனடாவில் வசிக்கும் திருமதி கவிதா இந்திரன் அவர்கள் தனது தமைக்காயான அமரர் கலையரசி நினைவாக உயர்கல்வி கற்கும் மாணவ மாணவியர்களுக்கு “அடுத்த ஆண்டு முழுமைக்குமான” கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இவ்வுதவியினை விசேட தேவைக்கு உட்பட்ட, மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும், மற்றும் பெற்றோர் இல்லாத மாணவ மாணவிகளில் பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வேளையில் அமரத்துவமடைந்த திருமதி கலையரசி பாலகோபாலன் அவர்களது ஆத்மா நித்திய வாழ்வில் இறைவனிடம் சரணடைந்து ஆனந்தப் பெருவாழ்வு வாழ இறைவனை தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் வேண்டிக் கொள்கிறது.

அத்தோடு இந்நிகழ்வுக்கான அனைத்து நிதியினையும் வழங்கிய கனடாவாழ் தமிழுறவான திருமதி கவிதா இந்திரன் அவர்களுக்கு எல்லாவற்றுக்கு மேலான நன்றியினை மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தெரிவித்து, எல்லோரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

மாணிக்கம்ஜெகன் (செயலாளர்)
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.

25.12.2021

புங்குடுதீவு அமரர் திருமதி கலையரசி நினைவாக, ஆத்ம சாந்திப் பூசையும், அன்னதான வைபவமும்.. (வீடியோ)

கனடா அமரர் திருமதி கலையரசி நினைவாக, தாயக உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (வீடியோ)

கனடா அமரர் திருமதி கலையரசி நினைவாக, தாயக உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ)


“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.