;
Athirady Tamil News

லண்டன் மதுரா, கனடா வசந்தா ஆகியோரின் பிறந்ததினக் கொண்டாட்டங்கள்.. (படங்கள் வீடியோ)

0

லண்டன் மதுரா, கனடா வசந்தா ஆகியோரின் பிறந்ததினக் கொண்டாட்டங்கள்.. (படங்கள் வீடியோ)

கனடா திருமதி வசந்தா மற்றும் லண்டன் செல்வி மதுரா இருவரது பிறந்தநாள் தாயக கிராமத்தில் கொண்டாடப்பட்டது.
########\##################

கனடாவில் வசிக்கும் வசந்தா அக்கா என அழைக்கப்படும் திருமதி பிரேமகுமாரி ரவி அவர்களது பிறந்த நாளும் லண்டனில் வசிக்கும் திரு.திருமதி கருணைலிங்கம் ஆனந்தி தம்பதிகளின் ஏக புதல்வி செல்வி மதுரா அவர்களது பிறந்தநாளும் ஒரே இடத்தில் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், கொழும்பு பிரபல வர்த்தகருமான சொக்கர் என அழைக்கப்படும் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஸ்) தம்பதிகளின் பேத்தியும், லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிர்வாக சபைத் தலைவரும், சிறந்த சமூக சேவகருமான கண்ணன் அண்ணன் என அன்புடன் அழைக்கப்படும் திரு.திருமதி. கருணைலிங்கம் ஆனந்தி தம்பதிகளின் ஏகபுதல்வியான செல்வி.மதுரா அவர்களின் பிறந்ததினமும், புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், கொழும்பு பிரபல வர்த்தகருமான சொக்கர் என அழைக்கப்படும் சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை (நாகேஸ்) தம்பதிகளின் மூத்த புதல்வியான வசந்தா அக்கா எனும் திருமதி. பிரேமகுமாரி ரவி அவர்களின் பிறந்த தினமும் ஒரேநேரத்தில் வவுனியாவில் உள்ள கிராமம் ஒன்றில் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் மாவட்ட அமைப்பாளர் திரு பெருமாள் சஞ்சீவன் அவர்களது நேர்த்தியான ஒழுங்கமைப்பில் கோலாகலாமாக கொண்டாடப்பட்டது..

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் நான்காம் பிரதேசத்தில் வசிக்கும் பெரியோர் தொடக்கம் சிறுவர் சிறுமியர்கள் என பலரும் ஒன்றுகூடி இருவரது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் பிறந்தநாள் பாட்டுப் பாடி கேக்வெட்டி கொண்டாடினார்கள். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இன்றைய நாளில் தமது பிறந்த நாளைக் கொண்டாடும் கனடா திருமதி வசந்தா அக்கா மற்றும் லண்டன் செல்வி மதுரா ஆகிய இருவரும் புங்குடுதீவு பிரபல வர்த்தகர் சொக்கர் என அழைக்கப்படும் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் மகளும் பேரப்பிள்ளையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களது குடும்பத்தின் எந்தவிதமான நிகழ்வு என்றாலும் அந்நிகழ்வினை தாயக உறவுகளோடு இணைந்து கொண்டாடி உதவி செய்து வருபவர்கள் என்பதை கட்டாயம் சொல்ல வேண்டும். அதுவும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தினூடாக இவர்கள் பலவேறு வாழ்வாதார மற்றும் கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற நிகழ்ச்சி திட்டத்தினூடாக தொடர்ச்சியாக உதவி செய்து வருவது சிறப்பாக குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் இருவருக்கும் தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப்பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி மன்றம்..
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

28.02 2022.

லண்டன் மதுரா, கனடா வசந்தா ஆகியோரின் பிறந்ததினக் கொண்டாட்டங்கள்.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.