;
Athirady Tamil News

கட்டாரில் பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளம் குடும்பஸ்தர்

0

கட்டாரில் தொழில் புரிந்துவந்த திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தந்தை ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை – கிண்ணியா, ரஹ்மானியா பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான நூர்தீன் நௌபீக் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இவர், நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் மரணமானதாக உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கடந்த ஐந்து வருடங்களாக கட்டாரில் தொழில் புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரது ஜனாஸா இன்று இலங்கை நேரப்படி இரவு 7.45 மணிக்கு கட்டார் அபு ஹமூர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.