;
Athirady Tamil News

கனடா அமரர் செந்தூரன் அவர்களின் முதலாமாண்டு நினைவாக விசேட அன்னதானம் வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

கனடா அமரர் செந்தூரன் அவர்களின் முதலாமாண்டு நினைவாக விசேட அன்னதானம் வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
######################

யாழ் அனலைதீவை பூர்வீகமாக கொண்டு கனடாவில் வசித்து வந்தவேளை அமரத்துவமடைந்த அமரர்.திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை அவர்களின் முதலாமாண்டு நினைவுநாள் அந்தியேட்டி நிகழ்வு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில் வன்னி எல்லைக் கிராமத்தில் அநேக பொதுமக்கள் மத்தியில் விசேட ஆத்மசாந்தி பூசையுடன் ஆரம்பமாகி, நிகழ்வுக்கு வருகை தந்த அனைத்து மக்களுக்கும் விசேட மதியஉணவு வழங்கப்பட்டது.

கடந்த வருடம் தை மாதம் 01.01.2022 அன்று கனடாவில் இறைபதம் அடைந்த அனலைதீவு 5ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை அவர்களின் நினைவாக, அவரது குடும்பத்தின் நிதி பங்களிப்பில், மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ். அனலைதீவை சேர்ந்தவரான அமரர் திரு. செந்தூரன் கணபதிப்பிள்ளை அவர்களின் முதலாமாண்டு நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.

அந்தியேட்டி நிகழ்வுக்கு கிராம மக்கள் அதிகமானோர் கலந்து அமரர் செந்தூரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தீபாரதனை காட்டப்பட்டு தேவாரபாராயணம் பாடப்பட்டு அந்தியேட்டிக் கிரியைகள் நிறைவு பெற்றதுடன், நிகழ்வுக்கு வருகை தந்த அனைவருக்கும் விசேட மதிய உணவு வழங்கப்பட்டது. அத்துடன் அன்னாரின் நினைவாக பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகளும் கிராமத்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட்து.

மேற்படி நிகழ்வுக்கான ஏற்பாட்டை மாணிக்கதாசன் நற்பணி மன்ற சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளரும் புங்குடுதீவு மண்ணின் மைந்தருமான திரு.குணராஜா உதயராஜா அவர்கள் கனடாவில் இருந்து மேற்கொள்ள, மாணிக்கதாசன் நற்பணி மன்ற வவுனியா மாவடட இணைப்பாளர் திரு.பெருமாள் சஞ்சீவன் தலைமையில் கிராமிய இணைப்பாளர்களின் ஒத்துழைப்பில் சிறப்பாக நடைபெற்றது.

அமரத்துவமடைந்த அமரர்.செந்தூரன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரர் செந்தூரன் அவர்களது முதலாமாண்டு நினைவாக அனுஸ்டிக்கப்பட்டு, முதலாமாண்டு அந்தியேட்டி நிகழ்வுக்கு நிதிப்பங்களிப்பினை வழங்கிய அன்னாரது நண்பர்கள் உறவினர்களுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
31.01.2022

கனடா அமரர் செந்தூரன் அவர்களின் முதலாமாண்டு நினைவாக விசேட அன்னதான வழங்கும் நிகழ்வு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.