;
Athirady Tamil News

வவுனியாவில் சமூக சேவையாளருக்கான நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிப்பு.. (படங்கள், வீடியோ)

0

வவுனியாவில் சமூக சேவையாளருக்கான நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிப்பு.. (படங்கள், வீடியோ)

வவுனியாவில் சமூக சேவையாளருக்கான நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிப்பு நிகழ்வானது நேற்றையதினம் சிறப்பாக நடைபெற்று உள்ளது.

இந்நிகழ்வில் முதலாவதாக வவுனியா கற்குளம் நான்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரினால் இன் நிகழ்வானது ஒருநிமிட இறை வணக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கற்குளம் நான்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.குணபாலராசா கோபிராஜ், கற்குளம் நான்கு கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் பெருமாள் ஸ்ரீகாந் ஆகியோரின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வில்ஆசிக்குளம் சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி தெய்வேந்திரம், சட்சிதானந்தம் பத்மனாதான், பெருமாள் சஞ்சீவன், முன்னாள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஞானபிரகாசம் ஜோசப், சின்னய்யா மணிவாசகம், கற்குளம் மூன்று கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு குருப்பாதம் குமணன், கற்குளம் நான்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் குணபாலராசா கோபிராஜ், செயலாளர் பெருமாள் ஸ்ரீகாந், உப தலைவர் பெருமாள் ஜெயகுமார், கற்குளம் நான்கு ஸ்ரீ நாகம்பாள் ஆலய தாலைவர் மூக்கன் கணேஸ்வரன். முன்னாள் ஆலய தலைவர் இராமசாமி சிவரஞ்சன், முன்பள்ளி ஆசிரியர் திருமதி சிவசந்திரன், முன்னாள் முன்பள்ளி ஆசிரியை திருமதி கார்த்திக் ராசா, இவர்கள் அனைவருக்கும் பாராட்டி கெளரவிப்பு செய்யபட்டு நினைவுசினங்கள் வழங்கி வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.

இறுதியாக நன்றி உரையுடன் இன்நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.

வவுனியாவில் சமூக சேவையாளருக்கான நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிப்பு.. (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.