;
Athirady Tamil News

குருநானக் ஜெயந்தி – சீக்கியர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து

0

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரான குருநானக் தேவின் 552-வது பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் குருநானக் ஜெயந்தி நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு குருத்வாராக்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு சீக்கியர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், குருநானக் தேவ்ஜியின் சமத்துவம், அமைதி மற்றும் சேவை பற்றிய தொலைநோக்கு பார்வை ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போலவே இன்றும் முக்கியமானது.
அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள சமூகங்களை சீக்கியர்கள் தொடர்ந்து பலப்படுத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.