;
Athirady Tamil News

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராட்டம்; யாழ் பொலிசாரின் தலையீட்டினால் இடைநிறுத்தம்!! (படங்கள், வீடியோ)

0

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடாத்தப்பட இருந்த போராட்டம் யாழ்ப்பாண பொலிசாரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தோரை நினைவு கூரும் மாவீரர் நாள் இன்றாகும்.

இந்த நிலையில் யாழ் நகரில் யாழ் சிவில் சமூக நிலையம் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராட்டம் ஒன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் நாடாத்துவதற்கு முற்பட்டிருந்தனர்.

போராட்டத்தை முன்னெக்க வந்தவர்கள் தேசிய கொடியை ஏந்தி விடுதலைப் புலிகளுக்கு எதிரான சுலோகங்களை தாங்கியவாறு விரைந்த நிலையில், தற்போதய சூழ்நிலையில் நபர்கள் ஒன்றுகூடி போராட்டங்கள் நடத்த முடியாது என பொலிசாரால் கூறப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட வந்தோரை கலைந்து செல்லுமாறும் இல்லாவிடின் கைது செய்து நீதிமன்றத்தில் முட்படுத்தப்படுவீர்கள் என பொலிஸார் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

சுகாதார விதிமுறைகளை மீறி யாழில் போராட்டம் – வேடிக்கை பார்த்த பொலிஸார்!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.