;
Athirady Tamil News

வீடு தீக்கரை – பெண்கள் உட்பட எழுவர் கைது!!

0

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பாலைமீன்மடு 50 வீட்டுத் திட்டத்தில் வீடு ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்கள் இருவர் உட்பட 7 பேரை இன்று (06) கைது செய்துள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி முதலாம் திகதி குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இரு குழுவினர் மதுபானம் அருந்தியுள்ள நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாக மாறியதையடுத்து ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நாகநாதன் நவநீதனின் வீடு இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டதை அடுத்து வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியது.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசார் சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உட்பட 7 பேரை இன்று கைது செய்தனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.