;
Athirady Tamil News

சீர்செய்யப்பட்ட மின்பிறப்பாக்கி – 300 MW மின்சாரம் இணைப்பு!!

0

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு தற்போது 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மின்வெட்டு தொடர்பில் இன்று (31) மீளாய்வு நடத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமை குறித்து இன்று பிற்பகல் கலந்துரையாடப்பட்டு மின்வெட்டு ஏற்படுமா இல்லையா என்பது தொடர்பில் உறுதியான அறிக்கை வெளியிடப்படும் என அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

நாளாந்த மின் உற்பத்தி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு எதிர்வரும் 27ஆம் திகதி முதல் இன்று வரை மின்வெட்டு ​மேற்கொள்ளப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னர் தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் இருப்புக்கள் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், நாட்டில் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க மின்சார சபைக்கு உறுதியான திட்டம் இல்லாத காரணத்தினால் மின்வெட்டுக்கு செசல்ல வாய்ப்புள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.