;
Athirady Tamil News

கட்டுப்பாட்டாளர்களுக்கு கொரோனா – புகையிரத சேவைகள் இரத்து!!

0

கட்டுப்பாட்டாளர்கள் சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதனால் இன்று (31) புகையிரத சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக பிரதான புகையிரத பாதையில் 6 புகையிரத சேவைகளும் புத்தளம் புகையிரத பாதையில் 3 ரயில் சேவைகளும், கரையோர புகையிரத பாதையில் 2 புகையிரத சேவைகளும், களனிவெளி புகையிரத பாதையில் 2 சேவைகளும் அடங்கலாக மொத்தமாக 14 புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.