;
Athirady Tamil News

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு !!

0

மொரவக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளம் பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.

மொரவக நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய இம்மாதம் 28ஆம் திகதி குறித்தப் பெண் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை கைது செய்யப்பட்டப் பெண் மொரவக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது இரவில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக மொரவக அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மொரவக நீதவான் நிதிமன்ற நீதிபதி நீதவான் விசாரணைகளை முன்னெடுத்ததோடு, உயிரிழந்தவர் தொடர்பில் பிரேதப் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

மொரவகவைச் சேர்ந்த 36 வயதுடையப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாத்தளை வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மாரடைப்பால் குறித்தப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.