;
Athirady Tamil News

ஈரானில் இதுவரை இல்லாத அளவுக்கு உயா் செறிவு யுரோனியம் குவிப்பு: ஐஏஇஏ

0

இன்னும் கொஞ்சம் செறிவூட்டினால் அணு ஆயுதங்களில் பயன்படுத்தலாம் என்ற அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இதுவரை இல்லாத அளவுக்கு ஈரான் இருப்பு வைத்துள்ளதாக ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு சமா்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:அணு ஆயுதத் தரத்துக்கு (90 சதவீத செறிவு) நெருக்கமான அளவுக்கு (60 சதவீத செறிவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பை ஈரான் மேலும் அதிகரித்துள்ளது. இந்த அளவு இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.தற்போதைய நிலவரப்படி, 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட 408.6 கிலோ யுரேனியம் ஈரானிடம் உள்ளது. இது, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்த 133.8 கிலோவைவிட சுமாா் 50 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் பிற வல்லரசு நா்களும் கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமன் பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.இந்த நிலையில், ஈரானுக்கும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நா்கள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2014-ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் கீழ், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நா்கள் சம்மதித்தன. அதற்குப் பதிலாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என்பதை உறுதி செய்வதற்கான நிபந்தனைகளை ஏற்க ஈரான் சம்மதித்தது.இருந்தாலும், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். அந்த ஒப்பந்தத்தின் விளைவாக தளா்த்தப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது மீண்டும் விதித்தாா்.அதற்குப் பதிலடியாக, அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அந்த ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட விகிதத்தைவிட கூடுதல் சதவீதத்தில் யுரேனியத்தை செறிவூட்டி, நிபந்தனை அளவுக்கு அதிகமாக ஈரான் இருப்பு வைத்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.