;
Athirady Tamil News

வவுனியாவில் வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு: ஒரே நாளில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!! (படங்கள்)

0

வவுனியா தவசிகுளம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் பொலிசாரால் இன்று (31.03) மாலை மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் இரு ஆண்களின் சடலங்கள் வவுனியாவில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா தவசிகுளம் பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனைவியும் அவருக்கு துணையாக பிள்ளையும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றிருந்த நிலையில் குடும்ப தலைவர் மட்டும் வீட்டில் நின்றுள்ளார்.

மனைவியும் பிள்ளையும் வைத்தியசாலையில் இருந்து வீடு சென்ற போது குறித்த குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதாக மனைவியால் கிராம அலுவலருக்கு வழக்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம அலுவலர் மற்றும் பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன் பொலிசார் சடலத்தை மீட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அப் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய மருதலிங்கம் நிமல்ராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இதேவேளை வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் இருந்தும் 35 ஆண் ஒருவரின் சடலம் காலை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.