;
Athirady Tamil News

யாழ். போதனாவில் மருந்து தட்டுப்பாடு!!

0

யாழ் போதானா வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவைக்கு பெரும் தட்டுப்பாடுகள் நிலவுவதாக வைத்திய சாலை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாடளவிய ரீதியில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையிலும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.

போதனா வைத்தியசாலையில் 73 அத்தியாவசிய மருந்துகள், சத்திர சிகிச்சைக்கு தேவையான 13 மருந்துகள், அவசரமாக தேவைப்படும் 53 வீதமான மருந்துகள் மற்றும் ஆய்வு கூடத்திற்கு தேவையான 6 மருந்துகள் என்பன இல்லாது உள்ளதாகவும், வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.