;
Athirady Tamil News

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு..!!

0

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களைக் கடந்துள்ளது.

மரியுபோலில் வெற்றி பெற்றதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தாலும் அங்கு சண்டைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நகரத்தை கைப்பற்றுவதற்கான ரஷிய முயற்சிகள் ஏமாற்றம் அளிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் உக்ரைன் தலைநகர் கீவுக்கு வருகை தந்தனர். அவர்களை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று சந்தித்தார் என அந்நாட்டு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்த வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நாளை மாஸ்கோ செல்கிறார். அங்கு அதிபர் புதின் மற்றும் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.