;
Athirady Tamil News

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் !!

0

நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரண தொகையை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கமைய, சமுர்த்தி பயனாளிகள், வயோதிபர்கள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் கொடுப்பனவுகளுக்கு மேலதிக தொகையாக இந்த நிவாரண தொகை வழங்கப்படவுள்ளது என்றார்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.