;
Athirady Tamil News

இலங்கைக்கு அவசர உதவி வழங்க AIIB யோசனை !!!

0

இலங்கைக்கு கொள்கையளவில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்குவது குறித்து ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) பரிசீலித்து வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் உறுதியளித்துள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரச வங்கிகளுக்கான அந்நிய செலாவணி கையிருப்பு ஆதரவை பலதரப்பு கடன் வழங்குனர்களிடமிருந்து இலங்கை கோரிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.