;
Athirady Tamil News

இந்தோனேசியாவில் ‘குரோக்’குக்குத் தடை

0

தொழிலதிபா் எலான் மஸ்கின் எக்ஸ்ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு உரையாடல் தளமான குரோக் இணையதளத்துக்கும், அதன் செயலிக்கும் இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் படங்களை ஆபாசமாக மாற்றிக் காட்டுவது போன்ற குரோக்கின் உள்ளடக்கங்கள் இந்தோனேசியாவின் சட்டங்கள் மற்றும் கலாச்சார மாண்புகளுக்கும் எதிராகவும் மத உணா்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் உள்ளதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை (ஜன. 9) முதல் அமலுக்கு வந்துள்ள இந்தத் தடையை அனைத்து இணைய சேவை நிறுவனங்களும் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.