;
Athirady Tamil News

வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து வாள்கள் மீட்பு!!

0

வல்வெட்டித்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்று இரு வாள்கள் மீட்கப்பட்டன என்றும், அதனுடன் தொடர்புடைய குற்றச்சாட் டில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த வீட்டில் கணவர் தகராறில் ஈடுபடுகின்றார் என்று மனைவியால் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டுக்கமைய குறித்த வீட்டுக்கு பொலிஸார் சென்றபோதே இரு வாள்களும் மீட்கப்பட்டன. அதையடுத்து தந்தை மற்றும் மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர் .

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.