;
Athirady Tamil News

வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளுக்கான ஆத்மசாந்தி பூசையும் நெய்தீபம் ஏற்றுதலும்!! (படங்கள்)

0

வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளுக்கான ஆத்மசாந்தி பூசையும் நெய்தீபம் ஏற்றுதலும்

வவுனியாவில் முள்ளிவாய்க்காலில் மரணித்த மக்களின் நினைவாக ஆத்மசாந்திப் பிரார்த்தனை குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இன்று (18.05) காலை இடம்பெற்றன.

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் மற்றும் குருமன்காடு ஸ்ரீ விநாயகர் ஆலய பரிபாலன சபையினர் இணைந்து இதனை ஏற்பாடு மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு உயிரிழந்த ஆத்மாக்களின் நினைவாக நெய் விளக்குகள் ஏற்றப்பட்டன.

குறித்த நிகழ்வில் உறவுகளை இழந்தவர்கள் , அந்தனர் ஒன்றிய பிரதிநிதிகள் , சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீபம் ஏற்றி ஆத்ம சாந்தி வேண்டிப் பிரார்த்தித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.