;
Athirady Tamil News

நில்கல வனப்பகுதி தொடர்பில் வௌியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

0

அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள நில்கல காடு, இன்று (2) அதிகாரப்பூர்வமாக ஒரு வனப்பகுதியாக அறிவிக்கப்படும் என்று சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

40,683 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட நில்கல காடானது, மெதகம, பிபில, நில்கல மற்றும் இங்கினியாகல ஆகிய நான்கு பகுதிகளில் பரந்து காணப்படுகிறது.

உத்தியோகபூர்வ வனப்பகுதி
இதன் பிரதான வனப்பகுதி பிபில பகுதியில் காணப்படுகிறது. நில்கல காட்டுப்பகுதியை உத்தியோகபூர்வ வனப்பகுதியாக அறிவிப்பதற்கான நிகழ்வினை வனப் பாதுகாப்பு திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வு இன்று (2) காலை பிபிலவில் உள்ள ஆதிவாசி மக்கள் உரிமை மத்திய நிலையத்தில் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தலைமையில் நடைபெற உள்ளது.

ஜூன் 5 ஆம் திகதி வரும் உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்தாக சுற்றாடல் அமைச்சு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

இதன் கீழ், தேசிய சுற்றுச்சூழல் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் வாரத்தின் நான்காவது நாளான நாளை பல்லுயிர் பாதுகாப்பு தினமாகக் குறிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.